கொழும்பின் முக்கிய வீதிகள் முடக்கம்.

0

கொழும்பில் இன்றைய தினம் மாபெரும் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார், கலகத்தடுப்பு பிரிவினர், இராணுவத்தினர் உள்ளிட்ட அனைவரும் ஜனாதிபதி செயலக வளாகம் உள்ளிட்ட பல இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கொழும்பின் முக்கிய பகுதிகளில் வீதித்தடைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சில வீதிகளை முடக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும், கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக அல்லது அதற்கருகில் போராட்டத்தை நடத்துவதற்கு அனுமதி வழங்குவதில்லை என பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அறிவித்துள்ளனர்.

கொழும்பில் இன்றைய தினம் மாபெரும் போராட்டத்தை நடத்த தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் கொழும்பு முழுவதும் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளின் தீவிர பங்கேற்புடன் இன்று (02.11.2022) மாலை 3 மணிக்கு கொழும்பு எல்பின்ஸ்டோன் திரையரங்கிற்கு அருகாமையில் மாபெரும் போராட்டம் ஆரம்பமாகவுள்ளது.

Leave a Reply