இந்த தேவதையின் ஆசி உங்களுக்கு கிடைத்தால் போதும், உங்கள் வாழ்கை சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்ததாக மாறுவதை யாராலும் தடுக்கவே முடியாது.

0

நாம் வாழும் வீடு என்பது கோவிலை போன்றது, கோவிலுக்கு செல்லும் போது எப்படி நாம் மனத்தூய்மையோடு, உடல் தூய்மையோடும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கோவிலில் அடி எடுத்து வைப்போமோ, அதே போலத் தான் நம் வீட்டில் நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் நல்ல எண்ணத்துடனும் நல்ல செயலுடனும் செய்யும் போது நம் எண்ணத்திற்கான அந்த பிரதிபலிப்பு கட்டாயமாக நம்ப வீட்டில் பரவத் தொடங்கும் சில நேரங்களில் நாம் செய்யும் தவறு நம் வாழ்வை படுகுழியில் தள்ளி விடும். அது எந்த மாதிரியான தவறுகளை நாம் செய்கிறோம் எதை செய்யக்கூடாது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு வீடு சுபிட்சமாக இருக்க லட்சுமி கடாட்சம் வேண்டும் என்பது எந்த அளவிற்கு உண்மையோ, அதே அளவிற்கு உண்மை அந்த வீட்டில் இருப்பவர்கள் வாயிலிருந்து தோன்றும் ஒவ்வொரு வார்த்தையும். உன் எண்ணங்கள் எப்படியோ அப்படியே உன் வாழ்வு அமையும் என்ற இந்த வார்த்தை அனைவரும் பல நேரங்களில், பல இடங்களில் கேள்வி பட்டதுண்டு. ஏனென்றால் நம் எண்ணத்திற்கு அத்தனை சக்தி இருக்கிறது. ஒரு சில வார்த்தைகளை நம் வீட்டில் பேசவே கூடாது என்று ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. இதை மீறி இந்த வார்த்தைகளை பேசும் வீட்டில் கண்டிப்பாக நீங்கள் எத்தனை பூஜை, புனஸ்காரங்கள், வழிபாடு என எதை செய்தாலும் ஏன் யாகமே நடத்தினாலும் கூட அங்கு மகாலட்சுமி தங்க மாட்டாள்.

வீட்டில் குழந்தைகளை பார்த்து சனியனே என்று ஒரு பொழுதும் குழந்தைகளை திட்டவே கூடாது. குழந்தைகளை மட்டுமல்ல வேறு யாரையும் கூடஇப்படி நாம் சொல்லவே கூடாது. இது மிகவும் ஒரு அமங்கலமான வார்த்தை சனி பகவான் கடவுளாகவே இருந்தாலும் இப்படி பேசும் போது அவர்கள் நம்மை அழைக்கிறார்கள் என்று எண்ணி வந்து விடுவார் என்று பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள். அடுத்து பிள்ளைகளை திட்டும் போது விளக்குமாறு, செருப்பு, இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி திட்டக் கூடாது.

அனைத்திலும் விட முக்கியமான ஒரு விஷயம் எதுவென்றால் நம் வீட்டில் இருந்து கொண்டு நாம் பிறருக்கு எந்த வகை சாபமும் கொடுக்கவே கூடாது. ஏனென்றால் சாபம் கொடுப்பது, பேசுவது, வேண்டுமானால் யாருக்கோ இருக்கலாம் ஆனால் வரும் வார்த்தை உங்களுடைய வாயிலிருந்து, உங்கள் வீட்டில் இருந்து வருகிறது. பொதுவாக வீட்டில் ததாஸ்து என்ற தேவதை வாழ்ந்து கொண்டிருப்பதாக ஒரு ஐதீகம் உண்டு. அவர்கள் நாம் என்ன பேசினாலும் ததாஸ்து (ததாஸ்து என்றால் அப்படியே ஆகட்டும் என்று பொருள்) என்று நம்மை வாழ்த்தி கொண்டே இருப்பார்கள். இது போன்ற வார்த்தைகள் உங்கள் வாயிலிருந்து வரும் போது அவர்களின் வாழ்த்தினால், உங்களுக்கு தான் பலிக்கும். எனவே எந்த காரணத்தை கொண்டும் இது போன்ற வார்த்தைகளை உபயோகிப்பக கூடாது.

அதே போல் சில வீடுகளில் எப்போதும் பெரியவர்களையோ அல்லது குழந்தைகளையோ நீ நல்ல இருக்க மாட்ட, விளங்காம போவ, உருப்பட மாட்ட இது போன்ற வார்த்தைகளையும் நீங்கள் பேசக் கூடாது. நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் அத்தனையுமே நல்ல வார்த்தைகளாகவே இருக்க வேண்டும். நன்றாக யோசித்த பாருங்கள் நீங்கள் இது போல அபசகுணமான வார்த்தைகளை பேசும் போது அந்த ததாஸ்து தேவதை வாழ்த்தினால் என்னவாகும். அதனால் தான் நாம் எப்போதும் நல்ல செயல்களை குறிக்கும் வார்த்தைகளை மட்டுமே பேசி வந்தாலே போதும் அந்த தேவதையின் வாழ்த்து பலித்து, உங்கள் வாழ்க்கை பல மடங்கு உயரும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

Leave a Reply