நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டம்.

0

2023ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று, நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுக் கூட்டம் இடம்பெற்றிருந்தது.

குறித்த கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்றிருந்த நிலையில், இதன்போதே வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பது தொடர்பான முடிவு எட்டப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 14ஆம் திகதி, நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உரை இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின் அடுத்த நாள் முதல் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply