வீட்டில் வற்றாத செல்வம் நிறைந்திருக்க வேண்டுமா? அப்படியானால் வெந்திய குளியல் முறை பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.

0

பெண்கள் சில நாட்கள் எண்ணெய் தேய்த்து குளிப்பதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும் என்ற நடைமுறையும் நம் வழக்கத்தில் இருக்கிறது.

அதுவும் குறிப்பாக வெள்ளிக்கிழமை, புதன் கிழமை பெண்கள் எண்ணெய் தேய்த்து குளித்தால் குடும்பத்திற்கு நல்லது.

அத்துடன் நம் வீட்டுக்கு வற்றாத செல்வத்தை வழங்கக்கூடிய அந்த வெந்திய குளியலை பெண்கள் புதன்கிழமைகளில் தலைக்குத் தேய்த்து குளிப்பதால் வீட்டில் செல்வ நிலை உயரும்.

என்பது இதுவரை அறியாத தகவலாக இருக்கும். இப்போது அதையும் தெரிந்து கொள்வோம்.

அதற்கு நாம் வெந்தயத்தை முதல் நாள் இரவே அதாவது செவ்வாய்க்கிழமை இரவு ஊற வைத்து விட வேண்டும்.

அடுத்த நாள் புதன்கிழமை விடியகாலையிலே எழுந்து ஆறு முப்பது மணிக்குள்ளாகவே இதை அரைத்து தலையில் தேய்த்து குளித்து விட வேண்டும். இப்படி செய்து வந்தால் அந்த வீட்டில் லட்சுமி கடாட்சத்திற்கு குறைவே இருக்காது.

அதே போல் செல்வம் வற்றாமல் பெருகிக்கொண்டே இருக்கும் இதைத் தேய்க்கும் போது எண்ணெய்யும் சேர்த்து தேய்த்து குளித்தால் இன்னும் சிறப்பு. புதன்கிழமை பெண்கள் எண்ணெய் தேய்த்து குளிப்பதால் அவர்களின் அறிவு வளர்ச்சியும் மேம்படும் என்று சொல்லப்படுகிறது.

இப்படி புதன் கிழமை வெந்தியம் தேய்த்து தலைக்கு குளித்து விடுவதால் மட்டும், செல்வம் சேர்ந்து விடாது.

குளித்து முடித்த பிறகு வீட்டில் விளக்கேற்றி வைத்து விட்டு அருகில் உள்ள ஏதாவது ஒரு பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளை வணங்கி விட்டு வர வேண்டும். நீங்கள் கோவிலுக்கு மாலை நேரத்திலும் செல்லலாம். உங்கள் வசதிக்கேற்ப சென்று பெருமாளை தரிசித்து வாருங்கள்.

ஆனால் கட்டாயமாக கோவிலுக்கு சென்று வர வேண்டும். இந்த குளியலை புதன் கிழமை செய்ய காரணம் புதன் கிழமை பெண்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதால் அவர்களின் அறிவு வளர்ச்சி மேம்படும். புதனுக்கு கிரகத்திற்குரிய வெந்தயம்.

இதை அந்த கிரகத்திற்குரிய நாளில் தலைக்கு அரைத்து தேய்க்கும் போது வற்றாத செல்வ வளமும் சேர்த்து கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் பெண்களுக்கு நல்ல வசீகர தன்மையும் கிடைக்கும்.

அடுத்து இந்த கிழமைக்கும் பெருமாளுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வியும் வரும். புதன் கிரகத்திற்கு காண தெய்வம் பெருமாள். அந்த கிழமையில் அந்த கிரகத்திற்கான ஒரு பொருளை கொண்டு நாம் குளித்து அந்த தெய்வத்தை வணங்கும் போது அதற்கான பலனாக நம் வீட்டில் செல்வ நிலை பல மடங்கு உயர்வதோடு, அன்றைய தினம் பெருமாளின் திருத்தலங்கள் எல்லாம் சென்று தரிசித்த பலன் கொடுக்க கூடியது இந்த வெந்திய குளியல்.

Leave a Reply