தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது.
இந்நிலையில் ஏற்பட்ட வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக இலங்கையர் பலர் உள்நாட்டில் வேலையின்றி தவிக்கின்றனர்.
குறிப்பாக கட்டுமாண தொழிலில் ஈடுபட்டோர் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக வேலைகளை இழந்துள்ளனர். இதனால் குடும்பத்தை காப்பாற்றுவதற்கு பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.
மேலும் குடும்பத்தை காப்பாற்றவும் அதிகரித்த வாழ்க்கைச் செலவை ஈடு செய்யவும் தொழில்களை தேடி வௌிநாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.