அரச ஊழியர்களுக்கு வெளியான அதிர்ச்சித் தகவல்.

0

அரச ஊழியர்களுக்கு ஐந்தாண்டு ஊதிய விடுப்பு இல்லாத சுற்றறிக்கையானது ஆசிரியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் போன்ற பிரிவுகளுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நீண்ட கால விடுமுறைக்கான சுற்றறிக்கையை அரசாங்கம் பல்வேறு நிறுவனங்களின் மேலதிகமான ஊழியர்களை விடுவிப்பதற்காகவே அறிமுகப்படுத்தவுள்ளதாக அரசாங்க நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே தெரிவித்தார்.

இந்நிலையில் நாட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பிரிவு ஊழியர்களுக்கு இது பொருந்தாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் “நாங்கள் இப்போது இந்த சுற்றறிக்கையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்,” என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply