வெளியானது புதிய வர்த்தமானி அறிவித்தல்.

0

அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக சில இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை திருத்தப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் ஓகஸ்ட் 23 அன்று வெளியிடப்பட்ட இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விதிமுறைகள் அடங்கிய 2022 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலை திருத்தியமைத்து புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக இறக்குமதி கட்டுப்பாடு அமுலில் உள்ளதாகவும், அப்பிரச்சினை தீர்க்கப்பட்டதும் அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என்றும் குறித்த தடை காரணமாக சில தொழில்களில் தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பத்திரன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply