அ.தி.மு.க. அலுவலகம் செல்ல ஓ.பி.எஸ் தரப்புக்கு போலீஸ் அனுமதி மறுப்பு.

0

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையேயான மோதல் முவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது.

கடந்த ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி கட்சின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் அந்றைய தினம் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் அவரது ஆதரவாளர்கள் சென்றனர். அப்போது ஏற்பட்ட மோதல் பெரிய கலவரமாகியது.

இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்டார். இது போன்ற பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் மாறுபட்ட தீர்ப்புகள் அளிக்கப்பட்டன.

Leave a Reply