இந்த அறிகுறிகள் எல்லாம் உங்கள் வீட்டில் இருந்தால் நிச்சயமாக ஏதோ ஒரு செய்வினை சம்பந்தப்பட்ட விஷயம் வீட்டில் இருக்கிறது என்று தான் அர்த்தம்.

0

நம்முடைய முன்னோர்களின் நம்பிக்கைபடி, பல்லி, காகம் இந்த இரண்டுமே இறை சக்தி நிரம்பிய ஒரு உயிரினமாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. ஒரு வீட்டில் பல்லி நடமாட்டமே சுத்தமாக இல்லை என்றால் அந்த வீட்டில் ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத பிரச்சனை இருப்பதாக அர்த்தம் என்று சொல்லப்பட்டுள்ளது. சில வீடுகளில் காகம் வரவே வராது. அந்த வீட்டு பக்கம் காகம் வருவதை நாம் பார்த்து கூட இருக்க மாட்டோம். அப்படி காகம் வராமல் பல்லியே வராமல் இருப்பதும் சில அபசகுனங்களை குறிப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

சில வீடுகளில் நன்றாக செழிப்பாக வளர்ந்த துளசி செடி, வேப்பஞ்செடி, அல்லது நீங்கள் ஆசை ஆசையாக வளர்த்த ஏதாவது ஒரு செடி பட்டென பட்டுப்போகும். இப்படி செடிகள் பட்டுப்போன பின்பு அந்த வீட்டில் பிரச்சனை தலைதூக்க ஆரம்பித்திருக்கும் அப்போது உங்களுடைய வீட்டில் கட்டாயம் ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கிறது என்று தான் அர்த்தம். சில வீடுகளில் அவர்கள் உயிருக்கு உயிராக வளர்த்த வளர்ப்பு பிராணிகள் கூட உயிர் இழந்திருக்கும். அந்த வளர்ப்பு பிராணி உயிரிழந்த உடன், இவர்களுக்கு வாழ்க்கையில் பெரிய இடி விழக்கூடிய சம்பவம் நடக்கும். இப்படி இருந்தாலும் அது கெட்ட சக்தி இருப்பதின் அறிகுறிதான்.

குலதெய்வ கோவிலுக்கு செல்லவே முடியாது. நேர்த்திக்கடனை செலுத்த முடியாது. குலதெய்வ பூஜையை வீட்டில் செய்யவிடாமல் தடுக்கும். இப்படி இருந்தாலும் உங்கள் குடும்பத்திற்கு ஏதோ ஒரு செய்வினை பாதிப்பு இருப்பதாக அர்த்தம். எல்லாம் தயாராக இருக்கும் கடைசி நேரத்தில் குலதெய்வ வழிபாட்டை செய்ய முடியாமல் போய்விடும்.

சில பேருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும். சில பேருக்கு எப்போதும் உடம்பில் நெருப்பு வைத்தது போல ஒரு எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். நன்றாக சுறுசுறுப்பாக வேலை செய்தவரால் வேலை செய்ய முடியாமல், எந்த நேரமும் சோர்ந்து போய்விடுவார்கள். ஒரு இடத்திலேயே முடங்கிக் கிடப்பார்கள். முகம் பொலி விழுந்து காணப்படும். இப்படி எல்லாம் இருந்தால் அவர்களுடைய உடம்பில் ஏதோ ஒரு கெட்ட சக்தியின் ஆதிக்கம் இருப்பதை நம்மால் கண்டுபிடித்து விட முடியும்.

சில வீடுகளில் சுவாமிக்கு வாசம் நிறைந்த சாம்பிராணியை ஏற்றி வைத்தால் வாசமே சுத்தமாக இருக்காது. அந்த இடத்தில் கட்டாயம் ஏதோ ஒரு கெட்ட சக்தி உலாவுது என்றுதான் அர்த்தம். உங்களுடைய கனவில் உங்கள் நிலை வாசலில்லோ அல்லது வீட்டிற்குள்ளேயோ காளை மாடு வருவது போல கனவு வரவே கூடாது.

இப்படி மேலே சொல்லப்பட்டிருக்கும் பிரச்சனைகள் எல்லாம் உங்கள் வீட்டில் இருந்தால், உடனே பயந்து விடக்கூடாது. உங்கள் வீட்டின் அருகில் ஏதாவது நரசிம்மர் கோவில் இருந்தால், அந்த நரசிம்மர் கோவிலுக்கு சென்று தினமும் வழிபாடு செய்யுங்கள். நரசிம்மர் கோவிலில் கொடுக்கப்படும் மஞ்சள் குங்குமம் எலுமிச்சம்பழம் போன்ற எந்த பொருட்களாக இருந்தாலும் நரசிம்மரின் பாதங்களில் இருந்து எடுத்து வந்து உங்கள் வீட்டு பூஜை அறையில் வையுங்கள். நரசிம்மர் பிரசாதத்தை தினமும் நெற்றியில் வைத்துக் கொள்ளுங்கள்.

முடிந்தவரை குலதெய்வ கோவிலுக்கு செல்லக்கூடிய வழியை பார்க்க வேண்டும். உங்களுடைய குலதெய்வம் அம்மனாக இருந்தால் அந்த அம்மன் கோவிலுக்கு சென்று மனம் உருகி உங்கள் குடும்ப வழக்கப்படி பொங்கல் வைத்தோ அல்லது அபிஷேகம் செய்தோ பூஜை செய்துவிட்டு திரிசூலத்தில் மூன்று எலுமிச்சம் பழங்களை சொருகி விட்டு வர வேண்டும்.

அம்மன் மடியில் வைத்து எலுமிச்சம் பழத்தை கொண்டு வந்து உங்களுடைய வீட்டில் வைக்க வேண்டும். இதையெல்லாம் செய்யும் போதே உங்களுடைய வீட்டில் இருக்கும் கெட்ட சக்தி வெளியேறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. அதை மீறியும் ஏதாவது பிரச்சனை பெரியதாக இருந்தால் நம்ப தகுந்த ஜோதிடரை பார்த்து பரிகாரம் செய்து கொள்வது நல்லது என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Leave a Reply