பூஜை அறையில் இந்த விநாயகரை வைத்து வழிபாடு செய்தால், விடாமல் துரத்தும் கஷ்டம் கூட 3 நாட்களில் விலகும்.

0

கண் கலங்க வைக்கும் கஷ்டம் இருந்தால், கண்ணை மூடிக்கொண்டு இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள். இந்த பரிகாரத்தை செய்வதற்கு முந்தைய நாளே ஒரு அரச இலையை கொண்டு வந்து வைத்துக் கொள்ள வேண்டும். எந்த கிழமையில் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். ஆனால் அதிகாலை வேலையிலேயே எழுந்து குளித்துவிட்டு பூஜை அறைக்கு சென்று பரிகாரத்தை தொடங்கி விட வேண்டும். அதாவது காலை 6.00 மணியிலிருந்து 7.00 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்து முடித்திருக்க வேண்டும்.

பூஜையறையை சுத்தம் செய்து வழக்கம் போல பூஜைக்கு தயாராக பூக்களை எல்லாம் சுவாமி படங்களுக்கு போட்டு அலங்காரம் செய்து கொள்ளுங்கள். பிறகு கொஞ்சமாக மஞ்சள் தூளை சின்ன கிண்ணத்தில் போட்டு பன்னீர் அல்லது தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து, ஒரு மஞ்சள் பிள்ளையாரை பிடித்துக் கொள்ளுங்கள். பிடித்த மஞ்சள் பிள்ளையாரை எடுத்து வைத்திருக்கும் அரச இலையின் மேல் வைத்து, பிள்ளையாருக்கு குங்குமம் போட்டு வைத்து, அருகம்புல் வைத்து பூஜையறையில் வைத்து விடுங்கள்.

ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு நீங்களும் இந்த அரசு இலை மேல் அமர்ந்திருக்கும் மஞ்சள் விநாயகர் முன்பு அமர்ந்து கொள்ளுங்கள். உங்கள் மனதை உருட்டிக் கொண்டிருக்கும் எந்த சங்கடமாக இருந்தாலும் சரி, அதை பிள்ளையாரிடம் சொல்லி அந்த சங்கடம் சீக்கிரம் தீர்வதற்கு வேண்டுதலை வைக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையில் இருக்கும் மனக்கஷ்டம், பணக்கஷ்டம், வேலையில் கஷ்டம், உடல் நலக் கோளாறு, கணவர் சரியில்லை, மனைவி சரியில்லை, பிள்ளைகள் சரியாக படிக்கவில்லை, இரவு நிம்மதியான தூக்கம் இல்லை, குடும்பத்தில் உறவுகளுக்குள் சங்கடங்கள் இப்படி உங்கள் நிம்மதியை கெடுக்கக்கூடிய, கஷ்டத்தை இந்த விநாயகரிடம் சொல்லி, மனம் உருக வேண்டிக் கொண்டால் அந்த கஷ்டத்திற்கு உண்டான தீர்வு உடனடியாக கிடைத்துவிடும். (ஆனால் இவ்வளவு பிரச்சனைகளையும் மொத்தமாக விநாயகரிடம் சொல்லாதீர்கள். அவரே குழம்பிவிடுவார். எதாவது ஒரு பிரச்சனைக்கான தீர்வை மட்டும் வேண்டுதலாக வைக்க வேண்டும்.)

மூன்று நாட்கள் நீங்கள் பிடித்து வைத்த பிள்ளையார் அப்படியே பூஜை அறையில் இருக்கட்டும். தினமும் விளக்கு ஏற்றி அந்த பிள்ளையாரை வழிபாடு செய்து வாருங்கள். மூன்றாவது நாள் அந்த மஞ்சள் பிள்ளையாரை எடுத்து ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி கரைக்க வேண்டும். மஞ்சள் பிள்ளையாரை கரைக்கும் போது உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் கரைந்து போய்விட்டது என்று மனதார நினைத்துக் கொண்டே கரையுங்கள்.

பிள்ளையாரை கரைத்த தண்ணீரை கொண்டு போய் கால் படாத இடத்திலோ அல்லது செடி கொடிகளுக்கு ஊற்றி விட வேண்டும். தீராத துன்பத்தில் இருக்கும் போது மூன்று நாள் இந்த வழிபாட்டை செய்து தான் பாருங்களேன். அதில் நல்லதொரு மன நிறைவு கிடைக்கும். பிரச்சனைக்கு உண்டான தீர்வும் கூடிய சீக்கிரத்தில் கிடைத்துவிடும். விநாயகர் வழிபாட்டை மனநிறைவோடு செய்பவர்கள் யாரும் கைவிடப்பட்டதில்லை என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Leave a Reply