இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 7,946 பேருக்கு தொற்று.

0

இந்தியாவில் புதிதாக 7,946 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளது.

நேற்று பாதிப்பு 7,231 ஆக இருந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 44 ஆயிரத்து 33 ஆயிரத்து 762 ஆக உயர்ந்தது.

பாதிப்பில் இருந்து நேற்று 9,828 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 38 லட்சத்து 45 ஆயிரத்து 680 ஆகவும் உயர்ந்துள்ளது.

தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 62,748 ஆக சரிந்துள்ளது. இது நேற்றை விட 1,919 குறைவு ஆகும்.

கொரோனா பாதிப்பால் மேலும் 37 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,27,911 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply