தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சினேகா.
இவர் நடிப்பில் வெளிவந்த ஆனந்தம், உன்னை நினைந்து, புதுப்பேட்டை, வசூல் ராஜா, ஆட்டோகிராஃப் ஆகிய படங்கள் நம் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
நடிகை சினேகா கடந்த 2013ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
சினேகா – பிரசன்னாவிற்கு விஹான் எனும் ஒரு மகனும், ஆதயந்தா எனும் ஒரு மகளும் உள்ளனர்.
னது குடும்பத்துடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சினேகா பதிவு செய்வார்.
அந்த வகையில் தற்போது தனது மகன், மகளுடன் நீச்சல் குளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
அதுமட்டுமின்றி தனது மகன் விஹானுக்கு பிறந்தநாள் வாழ்த்தையும் அதில் கூறியுள்ளார் சினேகா.




