கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாகிச்சூட்டு சம்பவம்!

0

கொழும்பு கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் சற்றுமுன்னர் ,மர்மநபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தால் பரப்ரப்பு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று கொண்டிருந்த போது, உள்நுழைந்த மர்ம நபர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார்.

போதைப்பொருள் தொடர்பிலான வழக்கு விசாரணையொன்று இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

வழக்குடன் தொடர்புடைய பிரதிவாதி, நீதிமன்ற விசாரணை கூட்டில் இருந்த சந்தர்ப்பத்திலேயே துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. பிரதிவாதியை நோக்கி, இரண்டு தடவைகள் மர்ம நபர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.

Leave a Reply