நாட்டின் தென்பகுதியில் தற்போது நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக கடும் மழை பெய்து வருகிறது.
இதனால் பாதைகள் மேவி வெள்ளம் பாய்வதனால் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளதோடு பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் பதற வைக்கும் காட்சிகளும் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் கொட்டும் மழையால் மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கான நீர்தேக்கங்களின் நீர் மட்டம் 62 வீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே வார இறுதி நாட்களில் மின் விநியோகத்தடை நடைமுறைப்படுத்தப்படும் கால எல்லை குறைக்கப்படுமென இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தற்போது பகல்,இரவு என மூன்று மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.