தொலைந்து போன பொருளை மீண்டும் கண்டுபிடிப்பதற்கு, இந்த பிள்ளையாரை வணங்கினாலே போதும்.

0

அலுவலகத்தில் மிகவும் முக்கியமான கோப்புகளை தொலைத்து இருப்போம். வேணுமுன்னே சில பேர் நம்முடைய பொருட்களை எடுத்து ஒளித்து வைத்து கூட நம்மை அலைய வைப்பார்கள்.

இப்படி எந்த வகையில் தொலைந்த பொருளை தேடி கண்டுபிடிக்கவும் இந்த பரிகாரம் உதவியாக இருக்கும். தொலைந்த பொருட்கள் மட்டுமல்லாமல், மனிதர்கள் தொலைந்து போய் இருந்தால் கூட அவர்களை தேடி கண்டுபிடிக்கவும் இந்த பரிகாரத்தை பயன்படுத்தலாம் என்றால் பாருங்கள். அவ்வளவு சக்தி வாய்ந்த பரிகாரம் தான் இது. பரிகாரத்தை செய்வதற்கு எந்த கஷ்டமும் இருக்காது. வீட்டில் இருந்தபடியே இந்த பரிகாரத்தை செய்ய முடியும்.

இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஆலமர இலைகள் தேவை. நான்கு ஆலமர இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதை மஞ்சள் தண்ணீரில் முதலில் கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு பூஜை அறைக்கு சென்று ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, குல தெய்வத்தை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். நான்கு ஆலமர இலைகளின் காம்புகளும் நான்கு திசையை பார்க்கும்படி வைத்து விடுங்கள். அந்த நான்கு ஆலமர இலைக்கும் மேலும் ஒவ்வொரு மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து, மஞ்சள் பிள்ளையாருக்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து பூ வைத்து விடுங்கள்.

இந்தப் பிள்ளையாருக்கு முன்பாக அமர்ந்து நீங்கள் எந்த பொருளை தொலைத்தீர்களோ அந்த பொருள் மீண்டும் திரும்பவும் கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையை செய்து கொள்ள வேண்டும். இந்த உலகத்தில் நீங்கள் தொலைத்த பொருள் நான்கு திசையில் எந்த இடத்தில் இருந்தாலும் அதைக் கொண்டு வந்து உங்கள் கையில் சேர்க்கக்கூடிய சக்தி இந்த ஆலமர மஞ்சள் விநாயகருக்கு உண்டு.

தொடர்ந்து 8 நாட்கள் இந்த பூஜையை செய்து பாருங்கள். நிச்சயமாக நீங்கள் தொலைத்த பொருள் தானாக உங்கள் கையை வந்து சேரும். ஒரு வேலை உங்களுக்கு பரிகாரத்தின் மூலம் எந்த பலனும் கிடைக்கவில்லை என்றால் இதோடு விட்டு விட வேண்டாம். தொடர்ந்து 48 நாட்கள் முயற்சி செய்து பாருங்கள். நம்பிக்கையுடன் இந்த பூஜையை செய்து வந்தால் நிச்சயமாக நீங்கள் தொலைத்த பொருளை மீண்டும் மீட்டெடுக்க முடியும்.

எட்டு நாட்களுக்கு ஒரு முறை பழைய மஞ்சள் பிள்ளையார், ஆலமர இலைகளை எடுத்துவிட்டு, மீண்டும் புதிய இலைகள் மஞ்சள் பிள்ளையாரை வைத்தால் போதும். இந்த எட்டு நாட்களுக்குள் மஞ்சள் பிள்ளையாரும் இலைகளும் வாடத்தான் செய்யும். பரவாயில்லை. பூக்களை மட்டும் மாற்றிவிட்டு காய்ந்த அந்த பிள்ளையார், இலைகளை வைத்து எட்டு நாட்களுக்கு பூஜை செய்யலாம் தவறு கிடையாது. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Leave a Reply