தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 அதிகரித்தது.

0

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருகிறது. கடந்த மாத தொடக்கத்தில் தங்கம் விலை பவுன் ரூ.38 ஆயிரத்துக்கு கீழ் இருந்தது.

சுமார் 3 வாரங்களுக்கு பிறகு கடந்த 28-ந்தேதி தங்கம் விலை மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. அன்று ஒரு பவுன் ரூ.38,136-க்கு விற்கப்பட்டது.

அதன்பிறகு தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. கடந்த 29-ந்தேதி பவுன் ரூ.38,440-க்கு விற்கப்பட்ட தங்கம் மறுநாள் 30-ந்தேதி ரூ .38,520 ஆக உயர்ந்தது.

31-ந்தேதியும் அதே விலையில் நீடித்தது. நேற்று தங்கம் விலை சற்று குறைந்து ரூ.38,360-க்கு விற்கப்பட்டது.

இந்த நிலையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.38,560-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.4,795-க்கு விற்கப்பட்டது.

இன்று கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.4,820-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.63.30-க்கு விற்கப்பட்டது.

இன்று கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.63.60-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.63,600-க்கு விற்பனையாகிறது

Leave a Reply