நாட்டிற்கு அந்நிய செலாவணியை கொண்டு வரும் நபர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் விசேட வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் சந்திப்பில் கலந்து கொண்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை நாட்டில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்த வாகனங்கள் இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.