கொழும்பு மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

0

உலகில் மிக வேகமாக பரவும் ஓமிக்ரோன் B.A 5 வகை கொழும்பில் பரவ ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொற்று நோயியல் பிரிவின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

புதிய வகை மாறுபாடு முதன்முறையாக இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் இந்த பிறழ்வு காரணமாக அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படலாம் எனவும் அவர் கூறினார்

கடந்த சில காலமாக உலகம் முழுவதும் கொரோனா அலையை உருவாக்குவதில் இது பெரும் பங்கு வகித்திருப்பதாகவும் பேராசிரியர் சந்திம ஜீவந்தர சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட அண்மைய மரபணு பகுப்பாய்வின் படி, இந்த Omicron துணை வகை இலங்கையில் பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய நோய் அல்லது தடுப்பூசிகள் மூலம் உடலில் கட்டமைக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் இந்தப் புதிய துணை வகைக்கு உள்ளது என கண்டறியப்பட்டுள்ளதால், கூடிய விரைவில் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் பரவி வரும் B.A 5 உப வகை எதிர்காலத்தில் மிகவும் ஆபத்தானதாக அமையலாம் எனவும் பேராசிரியர் சந்திம ஜீவந்தர எச்சரித்துள்ளார்.

Leave a Reply