எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான புதிய தகவல்.

0

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை முறையான கட்டுப்பாட்டுடனும் நிர்வாகத்துடனும் பேணுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த அறிவுறுத்தல்கள் அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு பூராகவும் எரிபொருள் விநியோகத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமைகளை உரிய திணைக்களங்களின் சரியான ஒருங்கிணைப்புடன் தீர்த்து வைக்குமாறும் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply