எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மரணம்.

0

புத்தல நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு இரவு உணவிற்காக பாண் ஒன்றை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றுக்கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரித்தனர்.

புத்தல கதிர்காமம் வீதியில் ராஜபக்ஷ மாவத்தைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த நபர் இராணுவ பொறியியலாளர் படையின் ஓய்வுபெற்ற சிப்பாய் வித்யாரத்ன மதியலகே வித்யாரதன என்றும் 45 வயதுடைய இவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் தகவல் வெளிவந்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் சாரதி மதுபோதையில் இருந்தாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply