போலியான இரத்தின கற்களை விற்ற நபர் எம்பிலிபிட்டிய பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.
எம்பிலிபிட்டிய மொர கெட்டிய பிரதேசத்தை சேர்ந்த இந் நபர் நீண்ட காலமாக இம் மோசடி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும் இம் மோசடி வியாபாரத்தை சமூக வலைத்தளம் மற்றும் இணையத்தளம் மூலம் நடத்தி வந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரால் ஏமாற்றப்பட்ட பல நபர்கள் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் எம்பிலிபிடிய பொலிஸாரால் மேலதிக விசாரணை மேற்கொன்டு வருகின்றன.