நாட்டைவிட்டு வெளியேற முற்பட்ட 300 பேர் கைது.

0

மட்டக்களப்பு கடற்பரப்பில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட மேலும் 62 பேர் கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 10 நாட்களில் மாத்திரம் வெளிநாடு செல்ல முற்பட்ட 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்வாறு கைதானவர்கள் முல்லைத்தீவு, திருகோணமலை, வல்வெட்டித்துறை, மானிப்பாய், கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, அச்சுவெலி, காங்கேசன்துறை, சந்திவெளி, தர்மபுரம் மற்றும் நாத்தாண்டியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என கடற்படை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்களுள் 10 சிறார்களும், 09 பெண்களும் இவர்களுள் உள்ளடங்குகின்றனர்.

Leave a Reply