தப்பியோடிய கோட்டாபய; ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த மக்கள்.

0

தடைகளை உடைத்து கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் பொதுமக்கள் நுழைந்துள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் கதவுகளை மக்கள் உடைத்து அவர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.

அதேவேளை போராட்டக்கார்கள் முற்றுகையிட்டதால் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, தப்பியோடியதாக பாதுகாப்பு தகவலை மேற்கோளிட்டு சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தடைகளை உடைத்து கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் பொதுமக்கள் நுழைந்துள்ள நிலையில் அவர் அங்கிருந்து சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

அதேவேளை கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்ததையடுத்து கோட்டை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply