இராணுவப் படையினர் இருவர் விமானப்படை இருவர் அதிரடி கைது!

0

கந்தக்காடு முகாமில் தடுப்பில் இருந்த ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் இராணுவப்படையினர் இருவரும், விமானப்படை அலுவலர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கந்தக்காடு முகாமில் கடந்தவாரம் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், 600க்கும் மேற்பட்டோர் தப்பி ஓடியிருந்தனர்.

இந்த நிலையில், 667 பேர் மீண்டும் சரணடைந்துள்ளதுடன், 57 பேர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply