எரிபொருளுக்காக காத்திருந்தவர்கள் மீது பேருந்து மோதி விபத்து!!

0

இலங்கையில் மட்டக்களப்பு – ஊறணி பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்திற்கு முன்னால், இன்று (திங்கட்கிழமை) காலை வரிசையில் தரித்திருந்த வாகனங்கள் மீது வீதியில் பயணித்த தனியார் பேருந்தொன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 5 பேர் வரையில் காயமடைந்துள்ளதுடன், 5 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த ஐவரும் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பேருந்தின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ள பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply