பிறந்த நாளை கூட்டினா 5 வருதா…? அப்போ நீங்க இப்படிப்பட்டவரா தான் இருப்பீங்க…!

0

5 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் பெரும்பாலும் ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் ஒன்றாக இருப்பார்கள். எல்லோருக்கும் பிடித்த எண்ணும் கூட 5 தான். 5 என்பது புதனுக்குரிய அதிபதியைக் கொண்ட எண்.

அதிர்ஷடமும் நன்மையும் தரும் எண் 5. புதனின் ஆதிக்கம் அதிகம் வலுத்திருப்பவர்களுக்கு அதிர்ஷடத்தை அள்ளிக் கொடுக்கும். அதனாலேயே பெரும்பாலான சோதிடர்கள் பெயர் குறித்துத் தரும்போது கூட்டுத் தொகையுள்ள பெயரைக் குறித்துத் தருகிறார்கள்.

சந்திரனின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். 1 முதல் 9 வரையிலும் உள்ள எண்களுக்கு நடுவில் இருக்கும் எண் 5 என்பதால், புத்திக்கூர்மையும் நிதானமும் கொண்டிருப்பார்கள்.

5 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் விஷ்ணுவின் முழு அனுக்கிரமும் கிடைக்கும். மற்ற கிரகத்தினருக்கு இல்லாத கவர்ச்சியும் ஈர்ப்பும் 5 ஆம் எண் கொண்டவர்களுக்கு உண்டு.

எல்லோரையும் வசியம் செய்யக்கூடிய தன்மை கொண்டவர்கள். கேலியுடன் பேசுவார்கள். ஆனால் அடுத்தவரைப் புண்படுத்த நினைக்க மாட்டார்கள். எத்தகைய உயரிய நபர்களைச் சந்தித்தாலும் தங்களுடைய தனித் தன்மையை உணர்த்திவிடுவார்கள்.

காந்தம் போல் மற்றவர்களை ஈர்க்கும் குணம் கொண்டவர்கள்.

பல வருடங்களுக்கு நட்புறவை வளர்ப்பதில் இவர்களுக்கு நிகர் இவர்கள் தான்.

எடுப்பான ஆடைகளை அணிய விரும்புவார்கள். தாங்கள் எடுக்கும் எந்த துறையிலும் சிறந்து விளங்குவார்கள்.

பார்வைக்கு எளிமையாக, அதேசமயம் அரசர்களையும் கவரும் வசீகரம் கொண்டவர்கள். மிடுக்கான பேச்சும் நடையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

புதிதாக எதையும் அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வமுடையவர்கள்.

நெளிவு சுழிவுகளை நன்கு தெரிந்து வைத்திருப்பார்கள். அவ்வப்போது நஷ்டம் உண்டானாலும் அதைப்பற்றிப் பெரிதாக நினைத்து மனம் உடைந்து போகமாட்டார்கள்.

புகழுக்கு மிக எளிமையாக மயங்கிவிடுவார்கள். எல்லா வகையான பிரச்னைகளுக்கும் எளிதாகத் தீர்வு சொல்லிவிடுவார்கள்.

அதிக உழைப்பும் அலைச்சலும் புத்திசாலித்தனமும் உடையவர்கள்.

எழுத்தாளர் பணியில் நன்கு பிரகாசிப்பார்கள். அந்த துறையில் யாரையும் பகைத்துக் கொள்ளாமல் ஏராளமான நண்பர்களைப் பெற்றிருப்பார்கள்.
இவர்களுடைய பேச்சிலும் விவாதங்களிலும் அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அதிகமாக இருக்கும்.

ஆராய்ச்சி, செய்தி பரப்பு துறைகள், பொதுமக்கள் தொடர்பு சம்பந்தமான தொழிலும் ஏற்றது.

இவர்களுக்கு காதல் மீது மோகம் அதிகம். துணிந்து பல காதல்களிலும் ஈடுபடுவார்கள். சிற்றின்ப இச்சையில் அதிக மோகம் கொண்டிருப்பார்கள்.

பொதுவாக எல்லோரிடமும் நட்பு பாராட்டுவார்கள். நண்பர்களை முழுமையாக நம்புவார்கள்.

அதிகமாக சிந்தனை செய்து கொண்டே இருப்பதால், டென்ஷன் அதிகம். அடிக்கடி ஏதாவது நரம்புகளில் வலி உண்டாகும். அதனால் இவர்கள் உணவில் அதிகமாக பருப்பு மற்றும் தானியங்களை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். -Source: tamil.eenaduindia


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply