நாட்டின் சில பகுதிகளில் 16 மணித்தியால நீர் விநியோக தடை.

0

நாட்டின் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கம்பஹாவின் பல பிரதேசங்களுக்கு இன்று (15) பிற்பகல் 02.00 மணி முதல் நாளை (16) காலை 06.00 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கம்பஹா மாநகர சபை எல்லை, கொழும்பு – கண்டி வீதியின் மிரிஸ்வத்தை சந்தியிலிருந்து அளுத்கம, போகமுவ தேவாலய வீதி வரையான பிரதேசங்களில் நீர் விநியோகம் குறித்த காலப்பகுதியில் தடை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply