தனியார் பேருந்து சேவைகள் முடக்கம்.

0

தற்போது நாட்டில் டீசல் தட்டுப்பாடு வருகின்றது.

இதன்பிரகாரம் அடுத்த வாரத்தில் தனியார் பேருந்து சேவை முழுைமயாக முடங்கும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

“இலங்கை போக்குவரத்துச் சபையினால் வழங்கப்படும் டீசல் தற்போது பற்றாக்குைறயாக உள்ளது. டீசல் இன்மையால், நேற்றைய தினம் பெருமளவான பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை.

நாளைய தினம் இந்த நிலைமை மேலும் உக்கிரமடையும். எரிபொருள் வழங்கப்படாமையால் அடுத்த வாரம் தனியார் பேருந்து சேவை முழுமையாக முடங்கும்” என எச்சரித்துள்ளார்.

பாடசாலை போக்குவரத்து சேவைகளும் கைவிடப்படும்
முழுமையாக முடங்கும் தனியார் பேருந்து சேவை! வெளியாகிய அறிவித்தல்

இதே நேரம் அடுத்த வாரத்தில் பாடசாலை போக்குவரத்து சேவைகளும் கைவிடப்படும் அபாயம் உள்ளதாக அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் டி சில்வா தெரிவித்துள்ளார்.

டீசலை பெற்றுக்கொள்வது கடினமாக உள்ளது எனவும் அதன் காரணமாக பாடசாலை பேருந்து சேவையில் இருந்து பலர் விலகியுள்ளதாக தெரிவித்தார்

Leave a Reply