மட்டக்களப்பு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை.

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்குநோய் பரவல் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், கடந்த மே 22 ஆம் திகதி தொடக்கம் ஜீன் 03 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 28 பேர் டெங்குநோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

குறித்த வாரத்தில் டெங்குதாக்கத்தினால் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16 நோயாளர்களும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 நோயாளர்களும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேரும், கோறளைப்பற்று மத்தி, களுவாஞ்சிகுடி மற்றும் ஆரையம்பதி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா 01 நோயாளர்களுமாக மொத்தமாக 28 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply