குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தற்போது மிகவும் பரபரப்பான இடமாக மாறிவருகின்றது.
இதற்கமைய குறித்த திணைக்களத்தின்
சேவையை 24 மணிநேரமும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த கோரிக்கையை முன்னாள் ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் முன்வைத்துத்துள்ளார்.
மேலும் இதற்குத் தேவையான மனித வளங்கள் தயார்படுத்தப்பட வேண்டுமெனவும் கூறிய அவர் , திணைக்களத்தின் கணினி அமைப்பு மந்தகதியில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.