லிட்ரோ எரிவாயு நிறுவனம் விடுத்த விசேட தகவல்.

0

இன்றைய தினம் மட்டுப்படுத்தப்பட்டளவிலே ரிவாயு விநியோகம் இடம்பெறுமென லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு மாத்திரம் விசேட எரிவாயு விநியோகம் இடம்பெறும்.

அத்துடன் 2,000 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

அதனை தொடர்ந்து, நாடளாவிய ரீதியில் எரிவாயு கொள்கலன் விநியோகம் இன்று வரை இடைநிறுத்தப்படுவதாக லிட்ரோ நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது.

நாளை மறுதினம் முதல் சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டிருந்த நிலையில், இன்றைய தினம் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு மாத்திரம் விசேட எரிவாயு கொள்கலன் விநியோகம் இடம்பெறுமென லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply