கொழும்பில் மாத்திரமே இன்று சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் இடம்பெறும் என லிட்ரோ நிறுவனத் தலைவர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று 16,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதன்படி, கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகளில் மட்டுமே எரிவாயு கொள்கலன் விநியோகம் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இன்று முதல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை எரிவாயு விநியோகிக்கப்படாதென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.