ஆந்திர பிரதேசத்தில் சாலை விபத்து: 6 பேர் பலி; 10 பேர் காயம்,

0

ஆந்திர பிரதேசத்தின் பல்நாடு மாவட்டத்தில் ரென்டசிந்தலா கிராமத்தில், ஸ்ரீசைலத்தில் இருந்து வந்த மினிவேன் ஒன்று சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

அதில் 39 பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில், அந்த வழியே வந்த லாரி ஒன்று, நின்றிருந்த மினிவேன் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்து சம்பவத்தில் , மினிவேன் புரண்டு தலைகுப்புற கவிழ்ந்தது. வேனில் இருந்த பயணிகள் பலர் காயமடைந்தனர்.

இந்த விபத்து சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பதுடன்
10 பேர் காயமடைந்துள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்த குர்ஜாலா போலீசார் சம்பவ பகுதியில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

விபத்தில் காயமடைந்த நபர்கள் 10 பேரும் உடனடியாக மீட்கப்பட்டனர். அவர்கள், குர்ஜாலா அரசு மருத்துவமனை மற்றும் நரசராவ்பேட்டை மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

மேலும் இந்த விபத்துச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply