அரச ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்.

0

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து நேற்றய தினம் ஊடகங்களில் வெளியான செய்திகளை, உண்மைக்கு புறம்பானது என பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் “ஊடகச் செய்திகளுக்கு அமைய அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும் முடிவை பிரதமர் எடுக்கவில்லை” என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், எதிர்வரும் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் கல்வித்துறை தவிர்ந்த ஏனைய அமைச்சுக்களுக்கான ஒதுக்கீட்டைக் குறைத்து நிவாரணம் வழங்க உள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வைக் கொண்டுவர பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக நேற்றையதினம் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply