குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு.

0

ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ் ஏற்கனவே நாள் மற்றும் நேரங்களை முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இம்மாதம் 17ஆம் திகதி முதல் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் வழமை போன்று ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எனினும், கடவுச்சீட்டு பெறுவதற்கு ஏற்கனவே நாள் மற்றும் நேரத்தை முன்பதிவு செய்தவர்கள் மட்டும் வருமாறு திணைக்களம் தெரிவித்திருந்தது. இருப்பினும், பல வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே நாள் மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யாமல் சேவைகளைப் பெற வருவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக முன்பதிவு செய்யாமல் வரும் அனைவரும் சிரமங்களை எதிர்க்கொள்வதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் www.immigration.gov.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து அல்லது 070 7101 060 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் நாள் மற்றும் நேரத்தை முன்பதிவு செய்பவர்கள் மாத்திரமே நிறுவனத்திற்கு வந்து சேவையை பெற்றுக்கொள்ளுமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply