நாட்டில் இன்றைய தினமும் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஆகவே பொதுமக்கள் அனைவரும் விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்கான வரிசையில் காத்திருக்க வேண்டாம் என குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அத்துடன் நாளைய தினம் நாட்டை வந்தடைய உள்ள கப்பலிலிருந்து எரிவாயுவை தரையிறக்கும் வரையில் எரிவாயு கொள்கலனின் வரை வினியோகிக்க இயலாது அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அவ்வாறு 3500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் நாளைய தினம் நாட்டை வந்தடைந்தடையவுள்ளது.
மேலும் 7500 மெட்ரிக் டன் எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்காக 6.5 மில்லியன் டொலர் கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் எரிவாயு மற்றும் எரிபொருள் என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக பொதுமக்கள் அந்த நிலையங்களுக்கு முன்னால் தற்போது நீண்ட வரிசையில் காத்திருக்கின்றமை குறிப்பிடதக்கது