ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்துள்ள அதிரடி தீர்மானம்.

0

தற்போது அரசாங்கத்தில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கட்சியின் மத்திய குழு கூடி முடிவெடுக்கும் என அதன் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மகிந்த அமரவீர ஆகியோர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply