தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு தொகை பூச்சிக்கொல்லி மருந்துகள் மீட்பு.

0

தமிழகம் தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 3 லட்சம் இந்திய ரூபாய் மதிப்பிலான பூச்சிக்கொல்லி மருந்துகளை தமிழக கடலோர பாதுகாப்புப் பிரிவு காவல்துறை நேற்றைய தினம் பறிமுதல் செய்துள்ளது.

இந்நிலையில் அந்த பகுதியில் திடீரென மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த பூச்சிக்கொல்லிகள் மீட்கப்பட்டன.

அத்துடன் போத்தல்களில் அடைக்கப்பட்டு இருந்த 375 லிட்டர் பூச்சிக்கொல்லி மருந்துகள் இதன்போது மீட்கப்பட்டது.

மேலும் குறித்த பூச்சிக்கொல்லி கடத்தல் தொடர்புடையவர்களை கைது செய்ய விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply