நாமல் ராஜபக்ஷவிடம் மூன்று மணிநேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

0

கடந்த 9ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மூன்று மணிநேரத்திற்கும் அதிக நேரம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நேற்று பிற்பகல் 4 மணியளவில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னிலையாகி இருந்தார்.

பின் அங்கிருந்து இரவு 7.30 மணி அளவில் வெளியேறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் காலிமுகத்திடலில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பில் பல தரப்பினரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டு வருகின்றது.

இந்த சம்பவங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த , மிலான் ஜயதிலக மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் , தலைவர் உள்ளிட்டோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையான காலப்பகுதியில் பெண்ணொருவர் உட்பட 16 பேர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply