பரீட்சை காலத்தில் இடம்பெறும் மின் துண்டிப்பு தொடர்பில் வெளியான தகவல்.

0

நாளை மறுதினம் முதல் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை கா.பொ.த சாதாரண தரப் பரீட்சை இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் நாளை மறுதினம் முதல் ஜூன் முதலாம் திகதி வரையான காலப் பகுதியில் மின் துண்டிப்பு அமுல்படுத்தப் படும் விதம் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளை மற்றும் 29 ஆம் திகதி ஆகிய தினங்களில் மின் துண்டிப்பு மேற்கொள்ளாது இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரையில் குறித்த இரண்டு தினங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் மாலை 6.30 க்கு பின்னர் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த தினங்களில் பரீட்சை இடம்பெறாத வேளையில் மதியம் 12 மணி முதல் மாலை 6 30 மணி வரையிலான காலப்பகுதிக்குள் கைத்தொழில் வளையம் மற்றும் கொழும்பு வர்த்தக நகரங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து வலயங்களிலும் 1 மணித்தியாலமும் 45 நிமிடங்கள் முதல் இரண்டு மணித்தியாலமும் 15 நிமிடங்கள் வரை மின்வெட்டு துண்டிக்கப்படும்.

அவ்வாறு கைத்தொழில் வலயங்களில் காலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் , கொழும்பு வர்த்தக நகரம் வலயத்தில் காலை 6 மணி முதல் ஒன்பது மணி வரையிலும் மூன்று மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply