இலங்கைக்கு வருகை தந்த மற்றுமொரு கப்பல்.

0

மேலும் ஒரு கப்பல் இலங்கை வந்தடைந்துள்ளது.

இந்நிலையில் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்றே இன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்துடன் குறித்த கப்பலில் சுமார் 3800 மெட்ரிக் டன் எரிவாயு கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால்,நாட்டின் பல பகுதிகளில் இருபத்தி நான்கு மணி நேரமும் மக்கள் வரிசையில் காத்து நிற்கின்றனர்.

இந்த வார இறுதியில் எரிபொருள் தட்டுப்பாடு தீர்க்கப்படும் என வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply