விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்.

0

விவசாய நடவடிக்கைக்காக எரிபொருள் பெற்றுக்கொள்ள புதிய திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலையுடன் 2022 ஆம் ஆண்டின் சிறுபோக பயிர்ச் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவற்றை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல தேவையான எரிபொருள் தொகையை விவசாயிகளுக்கு வழங்க அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் தீர்மானம் எடுத்துள்ளார்.

அவ்வாறு விவசாய நடவடிக்கைகள் அத்தியாவசிய சேவையாக அறிவித்து பயிர்ச் செய்கைக்கு பயன்படுத்தி இயந்திரம் மற்றும் வாகனங்கள் தொடர்பாக முறையான உரிய திட்டத்தின் படி, எரிபொருள் வழங்குவது தொடர்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட செயலாளரின் பரிந்துரைக்கு அமைய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விவசாய அமைப்புகளும், பிரதேச செயலாளரினால் தயாரிக்கப்பட்டுள்ளது திட்டங்களின் பிரகாரம் விவசாயிகள் தமக்கு தேவையான விபரங்களை பெற்றுக் கொள்ளுமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Leave a Reply