புதிய பிரதமர் நியமனத்தின் பின்னர் கூடும் முதலாவது நாடாளுமன்ற அமர்வு.

0

புதிய பிரதமர் நியமனத்தின் பின்னர் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று இடம்பெறுகின்றது.

இந்நிலையில் இன்று முற்பகல் 10 மணியளவில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகியது.

அத்துடன் குறித்த அமர்வின் போது புதிய பிரதி சபாநாயகருக்கான தெரிவு இடம்பெறவுள்ளது.

இதற்கமைய ஐக்கிய மக்கள் சக்தி, பிரதி சபாநாயகர் பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அஜித் ராஜபக்ஷவின் பெயரை முன்வைக்கத் தீர்மானித்துள்ளது.

இதன் பிரகாரம் பிரதி சபாநாயகர் தெரிவின் போது ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானிள்ளது.

மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதன் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் எதிர்க்கட்சி ஆசனத்தில் இருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆளும் தரப்பின் பக்கம் ஆசனம் வழங்கப்படவுள்ளது

Leave a Reply