இன்று நள்ளிரவு முதல் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகள் அனைத்தும் பரீட்சைகள் முடியும் வரை தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த விதிமுறைகள் மீறப்படுவதாக ஏதேனும் தகவல் கிடைத்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஜுன் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



