நாடளாவிய ரீதியில் நபர்களைத் தாக்கி பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் மேலும் 159 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த சந்தேகநபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக காவற் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்டகாவல் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற கலவரம் தொடர்பில் இதுவரை 398 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 9ஆம் திகதி முதல் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 159 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக நிஹால் தல்துவ தெரிவித்தார்.



