நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள பிரதமர்.

0

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்காக விசேட உரை ஆற்றவுள்ளார்.

இந்நிலையில் அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் இன்று கலந்துரையாடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் உலக வங்கி மற்றும் , ஆசிய அபிவிருத்தி வங்கி கடன் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் இன்று கலந்துரையாடவுள்ளதாக குறிப்பிட்டார்.

அதற்கான சட்ட மூலத்தை தயாரிப்பதற்கும், இந்த விடயம் தொடர்பான யோசனையை அமைச்சரவையில் முன்வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பான விசேட அறிவிப்பொன்றை நாட்டு மக்களுக்கு இன்றைய தினம் வெளியிட உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply