ராஜபக்ச குடும்பத்தில் ஏற்பட்ட முறுகல் நிலை.

0

தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகலாம் என மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ராஜபக்சக்களின் குடும்பத்திற்குள் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக எதிர்வரும் காலங்களில் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகி தற்போதைய பிரதமர் ஜனாதிபதியாகலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் முன்னாள் பிரதமரை ஜனாதிபதி காப்பாற்றாத காரணத்தினால் குடும்பத்திற்குள் கடும் அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் ஒருவரையொருவர் காட்டிக்கொடுக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply