நாடுபூராகவும் இன்று பிற்பகல் 2 மணி முதல் மீண்டும் காவல்துறை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள காவல்துறை ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துமூல அனுமதியின்றி , பொதுச்சாலை, தொடருந்து பாதை, பொதுப் பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
. மேலும் நாடு முழுவதும் அமல்படுத்த பெற்ற காவல்துறை ஊரடங்குச் சட்டம் இன்று காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தளர்த்தப்பட்டுள்ளது.



