இலங்கையில் மீண்டும் அமுலாகும் ஊரடங்குச் சட்டம்.

0

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள காவல்துறை ஊரடங்கு சட்டம் இன்று காலை ஏழு மணி யுடன் தளர்த்தப்பட்டது.

இந்நிலையில் இவ்வாறு கடத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மீண்டும் இன்று பிற்பகல் 2 மணிக்கு அமல்படுத்தப்படும்.

இவ்வாறு அமல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் நாளை காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, பொதுச் சாலை, தொடருந்து பாதை, பூங்காக்கள், பொது விளையாட்டு மைதானம் அல்லது கடையில் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Leave a Reply