ஆழ்ந்த சோகத்தில் முல்லைத்தீவு மாவட்டம்.

0

முல்லைத்தீவு அளம்பில், செம்மலை கடலில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் ஒரே குடுபத்தை சேர்ந்த மூவரும் கடலில் மூழ்கிய நிலையில் , இன்று காலை 7.30 மணியளவில் மூன்றாவது சகோதரனின் உடலமானது நாயாற்றுக்கு நேர் மேலேயுள்ள கடலிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் பத்மநாதன் விஸ்வநாதன்( 29 வயது), பத்மநாதன் விஜித் (27 வயது), பத்மநாதன் விழித்திரன் (25 வயது) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

நேற்றைய தினம் நண்பர்களுடன் கடலில் நீராடச் சென்றிருந்த போதே குறித்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.

மேலும் ஏனைய இரு சகோதரர்களின் உடலங்களையும் தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Leave a Reply